ADDED : பிப் 05, 2024 11:51 PM
தேவகோட்டை, : தேவகோட்டை அருகே ஈகரை மணிமுத்தாறு ஆற்றின் அருகே உள்ளது ஆற்றங்கரை நாச்சியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலைச் சுற்றி சி.சி. டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 4 ந்தேதி இரவு வழக்கம் போல் பூஜாரி பூமிநாதன் கோயிலை பூட்டி சென்று விட்டார். நேற்று முன்தினம் கோயிலுக்கு வந்த பூஜாரி உண்டியல் உடைக்கப்பட்டு பணம் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டதை பார்த்தார். சிசி டிவி கேமராவும் உடைக்கப்பட்டு இருந்தது.
பூமிநாதன் தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.போலீசார் விசாரிக்கின்றனர்.