Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குவாரி குட்டையில் மூழ்கியவர் 3 நாளுக்கு பின் சடலமாக மீட்பு

குவாரி குட்டையில் மூழ்கியவர் 3 நாளுக்கு பின் சடலமாக மீட்பு

குவாரி குட்டையில் மூழ்கியவர் 3 நாளுக்கு பின் சடலமாக மீட்பு

குவாரி குட்டையில் மூழ்கியவர் 3 நாளுக்கு பின் சடலமாக மீட்பு

ADDED : மார் 27, 2025 07:02 AM


Google News
குன்றத்துார்: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன், 28; குன்றத்துாரில் நண்பர்களுடன் தங்கி, இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, நண்பர்களுடன் குன்றத்துார் அருகே எருமையூரில் உள்ள கல் குவாரி குட்டையில் குளித்தார். அப்போது பாலமுருகன், எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி மாயமானார்.

50 அடி ஆழத்திற்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளதால், நீரின் அழுத்தம் காரணமாக, உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. மூன்று நாட்கள் தேடியும் உடல் கிடைக்கவில்லை. நான்காவது நாளான நேற்று பாலமுருகன் உடல் குட்டையில் மிதந்தது. சோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us