ADDED : செப் 20, 2025 11:45 PM
காரைக்குடி: காரைக்குடியில் அஞ்சல் துறை மற்றும் நேஷனல் பயர் சேப்டி கல்லுாரி சார்பில் துாய்மை பாரத விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
காரைக்குடி கோட்ட அஞ்சல் உட்கோட்ட ஆய்வாளர் ரித்தீஷ் சவுகான் தலைமையேற்றார். காரைக்குடி தலைமை அஞ்சல் அலுவலர் காளீஸ்வரன், நேஷனல் கல்லூரி முதல்வர் தனசீலன் முன்னிலை வகித்தனர். இதில் காரைக்குடி உட்கோட்ட அஞ்சல் ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.