Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ஏ.ஐ.டி.யு.சி., ஆட்டோ தொழிலாளர் கூட்டம்

ஏ.ஐ.டி.யு.சி., ஆட்டோ தொழிலாளர் கூட்டம்

ஏ.ஐ.டி.யு.சி., ஆட்டோ தொழிலாளர் கூட்டம்

ஏ.ஐ.டி.யு.சி., ஆட்டோ தொழிலாளர் கூட்டம்

ADDED : ஜன 13, 2024 05:11 AM


Google News
சிவகங்கை : சிவகங்கையில் ஏ.ஐ.டி.யு.சி., ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் இந்திய கம்யூ., அலுவலகத்தில் நடந்தது.

ஆன்ட்ரோஸ் தலைமை வகித்தார். ஆட்டோ சங்க மாநில செயலாளர் மாரியப்பன், தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன், கம்யூ., மாவட்ட செயலாளர் சாத்தையா, மாநில துணைத்தலைவர் ராமச்சந்திரன், நகர செயலாளர் மருது கலந்து கொண்டனர்.

புதிய நிர்வாகிகளாக ஆட்டோ சங்க மாவட்ட செயலாளராக சகாயம், மாவட்ட தலைவராக ராஜா, மாவட்ட துணைச் செயலாளராக பாண்டி, சரவணன், பாபா, துணைத் தலைவர்களாக மைக்கேல்ராஜ், கருப்புச்சாமியும், பொருளாளராக ஆண்ட்ரூஸ் தேர்வு செய்யப்பட்டனர். தமிழக அரசு வாகனங்களுக்கான சாலை வரி உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.

முறையற்ற முறையில் போடப்படும் ஆன்லைன் அபராதங்களை நிறுத்த வேண்டும், ஆந்திர மாநிலத்தை போன்று வாகனங்களை எப்.சி., எடுக்கும்போது ஆட்டோ தொழிலாளிக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us