/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ விஜயேந்திர சரஸ்வதி சுவாமி இளையாத்தங்குடியில் வழிபாடு விஜயேந்திர சரஸ்வதி சுவாமி இளையாத்தங்குடியில் வழிபாடு
விஜயேந்திர சரஸ்வதி சுவாமி இளையாத்தங்குடியில் வழிபாடு
விஜயேந்திர சரஸ்வதி சுவாமி இளையாத்தங்குடியில் வழிபாடு
விஜயேந்திர சரஸ்வதி சுவாமி இளையாத்தங்குடியில் வழிபாடு
ADDED : ஜூலை 19, 2024 11:59 PM

திருப்புத்துார் : இளையாத்தங்குடியில் உள்ள 65 ஆவது பீடம் மகா தேவேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி அதிஷ்டானத்தில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு நடத்தினார்.
இளையாத்தங்குடியில் 65 ஆவது பீடம் மகா தேவேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமி முக்தி அடைந்த நிலையில் அவரது நினைவாக அதிஷ்டானம் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமி வருகை புரிந்தார். அதிஷ்டானத்திற்குள் தியானம் மேற்கொண்டு சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினார். பின்னர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
தொடர்ந்து ஆர்.எம். மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அரசுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதற்கு வெள்ளி குத்துவிளக்கு வழங்கி ஆசி வழங்கினார். தொடர்ந்து நித்திய கல்யாணி அம்மன் கோயில் குளத்தில் உள்ள 65 ஆவது பீடம் மகேந்திர சரஸ்வதி சுவாமி சிலையினை வழிபட்டார். முன்னதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எச். ராஜா, வழக்கறிஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், கல்வி நிலையத் தாளாளர்கள் எஸ்.எம்.பழனியப்பன், வித்தியாகிரி சுவாமிநாதன், மகரிஷி சேதுராமன், இளையாத்தங்குடி சங்கரமட நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், விஸ்வநாதன், கார்த்தி, சுந்தரேசன், செஞ்சிலுவை சங்க மாவட்ட தலைவர் சுந்தர்ராமன், எஸ். புதுார் முன்னாள் ஒன்றிய தலைவர் சத்தியமூர்த்தி, ஜி. குணா ளன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.