ADDED : ஜூலை 28, 2024 06:37 AM
மானாமதுரை : சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், வி.சி.க., தலைவர் திருமாவளவனுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க கோரியும் மானாமதுரையில் வி.சி.க., சார்பில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஒன்றிய செயலாளர் விடுதலை மாணிக்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜீவன் வரவேற்றார். நகரச் செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.பி.எஸ்.பி.,தென்மண்டலஒருங்கிணைப்பாளர் வக்கீல் மனோகரன், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் சேகர், தெக்கூர் ஜீவா, முற்போக்கு மாணவரணி மாவட்ட அமைப்பாளர் முத்துப்பாண்டி பேசினர்.