ADDED : ஜூலை 28, 2024 11:59 PM

சிங்கம்புணரி :
சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி தர்மஷம்வர்த்தினி சமேத சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு வடுக பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
யாகம் நடத்தி பைரவருக்கு அபிஷேகம் செய்தனர். சிவகங்கை தேவஸ்தான கண்காணிப்பாளர் ஜெய்கணேஷ் ஏற்பாடுகளை செய்திருந்தார். சிவாச்சாரியார் ரவி பூஜைகளை செய்தார்.
பிரான்மலை மங்கைபாகர் கோயிலில் உள்ள வடுக பைரவருக்கு உமாபதி சிவாச்சாரியார் தேய்பிறை அஷ்டமி பூஜையை நடத்தினார். மணப்பட்டியில் பைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடந்தது.