Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ எலும்புக்கூடாக மாறியது

எலும்புக்கூடாக மாறியது

எலும்புக்கூடாக மாறியது

எலும்புக்கூடாக மாறியது

ADDED : ஜூலை 10, 2024 04:56 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை, : சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் உள்ளது. இப்பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலகம், சிவகங்கை ஒன்றிய வட்டார வள மையம், அரசு தேர்வு துறை இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

பள்ளி எதிரே உள்ள மின்கம்பம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. மின்கம்பத்தின் சிமென்ட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இரும்புக் கம்பிகளும் சேதம் அடைந்து வருவதால், காற்று அதிகம் வீசினால் மின்கம்பம் உடைந்து விழும் அபாயம் உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us