Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கீழடி அருங்காட்சியகத்தில் துாசி படிந்த பொருட்கள்

கீழடி அருங்காட்சியகத்தில் துாசி படிந்த பொருட்கள்

கீழடி அருங்காட்சியகத்தில் துாசி படிந்த பொருட்கள்

கீழடி அருங்காட்சியகத்தில் துாசி படிந்த பொருட்கள்

ADDED : ஜூலை 19, 2024 06:22 AM


Google News
Latest Tamil News
கீழடி : கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் துாசி படிந்து காட்சியளிக்கிறது.

கீழடி அருங்காட்சியகத்தில் 13 ஆயிரத்து 344 பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பாக கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளன.

அருங்காட்சியகம் திறக்கப்பட்டு 15 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்று வரை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை.

கண்ணாடி பெட்டிக்குள் இருந்தாலும் பொருட்கள் மீது துாசி படிந்து அழுக்காக காணப்படுகிறது. அருங்காட்சியகத்தில் சுருள் வடிவ குழாய், உறைகிணறுகள் உள்ளிட்டவை மாடலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இவை சேதமடைந்துள்ள நிலையில் இன்று வரை சரி செய்யப்படவில்லை.

இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பொருட்களை உரிய முறையில் பாதுகாப்பதுடன் சுற்றுலா பயணிகளும் கண்டு ரசிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us