ADDED : மார் 14, 2025 07:17 AM
காரைக்குடி: செட்டிநாடு வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள் கிராமப்புற வேளாண்மை பயிற்சி திட்டத்தின் கீழ் சிங்கம்புணரியில் உள்ள கிராமங்களில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
2 மாதங்கள் மாணவர்கள் தங்கி பயிற்சி பெறுகின்றனர். பயிற்சியின்போது, மகளிர் தினத்தை ஒட்டி கல்லூரி மாணவ, மாணவிகள் மகளிர் தினம் கொண்டாடினர். இதில், வேளாண் அலுவலர் பிரியா, வேளாண் அலுவலர் கார்த்திகா, துணை வேளாண்மை அலுவலர் பாலமுருகன், உதவி வேளாண்மை அலுவலர் ரத்தின சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.