/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ புறம்போக்கு நில குடிசைகளுக்கு அரசு கனவு இல்ல வீடு இல்லை புறம்போக்கு நில குடிசைகளுக்கு அரசு கனவு இல்ல வீடு இல்லை
புறம்போக்கு நில குடிசைகளுக்கு அரசு கனவு இல்ல வீடு இல்லை
புறம்போக்கு நில குடிசைகளுக்கு அரசு கனவு இல்ல வீடு இல்லை
புறம்போக்கு நில குடிசைகளுக்கு அரசு கனவு இல்ல வீடு இல்லை
ADDED : ஜூலை 04, 2024 11:13 PM
சிவகங்கை:புறம்போக்கு நிலங்களில் குடிசை கட்டியவர்களுக்கு அரசின் கனவு இல்ல திட்டத்தில் வீடு வழங்கக்கூடாது என மாநில அரசு கண்டிப்பாக தெரிவித்துள்ளது.
2030 க்குள் தமிழகத்தில் குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றும் முயற்சியில் ஒருகட்டமாக அடுத்த 6 ஆண்டிற்குள் அரசின் கனவு இல்லம் திட்டம் மூலம் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தாண்டு முதற்கட்டமாக ஒரு லட்சம் வீடுகள் கட்டித்தரப்படவுள்ளன.
இதற்காக ஒரு பயனாளிக்கு வீட்டிற்கு தலா ரூ.3.50 லட்சம் வரை அரசு வழங்க உள்ளது. இத்திட்டத்தில் பலன் பெற சொந்தமாக நிலம், பட்டா அவசியம்.
புறம் போக்கு நிலத்தில் குடிசை கட்டியிருந்தால், அவர்களுக்கு அரசின் கான்கிரீட் வீடு திட்டத்தில் நிதி வழங்க கூடாது. குடிசையில் வாடகைக்கு குடியிருப்போரை பயனாளியாக தேர்வு செய்ய முடியாது. வணிக நோக்கு, பிற பயன்பாட்டிற்காக உள்ள குடிசைகளுக்கு வழங்க கூடாது. குடிசை வீட்டில் ஒரு பகுதி கான்கிரீட், ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட வீடாக இருந்தால், பயன் பெற முடியாது. குடிசை வீட்டில் குடியிருந்தாலும் அரசு ஊழியர், உள்ளாட்சி, பொது நிறுவனம், அரசின் நிதி உதவிபெறும் நிறுவன ஊழியர்கள் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது.
கனவு இல்ல திட்டம் மூலம் பயன் பெற தகுதியான குடிசைகள் பட்டியல் ''tnrd.tn.gov.in'' மற்றும் ''tndrdpr.org''இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கனவு இல்ல வீட்டினை குறைந்தது 360 சதுர அடியில் கட்ட வேண்டும். வீட்டிற்கு தலா ரூ.3.50 லட்சம் மூன்று தவணையாக பயனாளிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இது தவிர வீட்டிற்கு ரூ.12,000 செலவில் கழிப்பறை கட்டித்தரப்படும். பயனாளிகளை உறுதி செய்திட ஊராட்சி தலைவர், ஒன்றிய பொறியாளர், மண்டல துணை பி.டி.ஓ., ஒன்றிய மேற்பார்வையாளர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை கொண்ட குழு அமைக்கப்படும் என அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.