ADDED : ஜூன் 30, 2024 04:40 AM
காரைக்குடி, : கோட்டையூரில் திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை பயிற்சி மையத்தில், மத்திய மாநில அரசின் திட்டமான தீன் தயாள் உபாத்யாயா கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தில் கம்ப்யூட்டர் பயிலும் மாணவிகளுக்கு பயிற்சி தொடங்கி வைக்கப்பட்டு இலவச பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இதில், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் கவிதா பிரியா உபகரணங்கள் மற்றும் வேலைவாய்ப்பிற்கான உத்தரவுகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் விஸ்வநாத கோபாலன் தலைமையேற்றார். உதவி திட்ட அலுவலர் மரியா, நிறுவன இயக்குனர்கள் ஆதீனம், செந்தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டனர்.