ADDED : ஜூலை 25, 2024 11:55 PM
தேவகோட்டை : தேவகோட்டை ஆனந்தா கல்லுாரியில் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கம் செயலாளர் செபாஸ்டியன் தலைமையில் நடந்தது.
முதல்வர் ஜான் வசந்த் குமார் வரவேற்றார். நாஸ்காம் ஸ்கிப் நிறுவன ஒருங்கிணைப்பாளர்கள் ஜோசப் ஸ்டான்லி, சதீஸ், ஜோய் வேலைவாய்ப்பு துறையில் உயர்கல்வியின் அவசியம், நவீன தொழில் நுட்ப பயன்பாடு பற்றி விளக்கினர்.