Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ 'போக்சோ' வழக்கில் முதியவருக்கு ஆயுள் சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு

'போக்சோ' வழக்கில் முதியவருக்கு ஆயுள் சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு

'போக்சோ' வழக்கில் முதியவருக்கு ஆயுள் சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு

'போக்சோ' வழக்கில் முதியவருக்கு ஆயுள் சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு

ADDED : ஜூலை 20, 2024 03:13 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 3 வயது குழந்தையை பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை அனுபவிக்க போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மானாமதுரை அருகே மணலுார் காலனியைச் சேர்ந்தவர் கருப்பசாமி என்ற கலைஞர் 61. இவர் கூலி வேலை செய்து வந்தார். 2020 ஜூன் 13 ல் 3 வயது குழந்தையை வீட்டிற்கு துாக்கி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

குழந்தையின் தாய் மானாமதுரை மகளிர் போலீசில் புகார் அளித்தார். கருப்பசாமி மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

இவ்வழக்கு விசாரணை சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. கருப்பசாமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கோகுல்முருகன் தீர்ப்பளித்தார். குழந்தைக்கு அரசு தரப்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us