ADDED : மார் 13, 2025 05:01 AM

இளையான்குடி: முனைவென்றி கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்து 60 பயனாளிகளுக்கு ரூ.11.18 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வானதி,சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கார்த்திகேயன், இளையான்குடி தாசில்தார் முருகன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.