ADDED : ஜூலை 28, 2024 11:53 PM

காரைக்குடி : காரைக்குடி அருகே வ.சூரக்குடியில் தடையை மீறி நடந்த வடமஞ்சு விரட்டில் மாடு முட்டியதில் கார்த்தி 24, பலியானார். இதில், 5க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர்.
வடமஞ்சுவிரட்டில் சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த 13 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 117 வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.
ஒவ்வொரு காளைக்கும் 20 நிமிடம் என நிர்ணயித்து, ஒரு காளையை அடக்க 9 வீரர்கள் இறக்கிவிடப்பட்டனர்.
இதில், காளைகள் முட்டியதில் ஒருவர் பலியானார், 5 பேர் காயமுற்றனர். வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர், வீரர்களுக்கு பரிசு வழங்கினர்.