Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ துபாயில் இறந்த கணவர் உடலை  மீட்க மனு   

துபாயில் இறந்த கணவர் உடலை  மீட்க மனு   

துபாயில் இறந்த கணவர் உடலை  மீட்க மனு   

துபாயில் இறந்த கணவர் உடலை  மீட்க மனு   

ADDED : ஜூலை 27, 2024 06:20 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை : சிவகங்கை அருகே கண்டாங்கிபட்டி ஊராட்சி சிவல்பட்டியை சேர்ந்தவர் குமார் 54. இவரது மனைவி லலிதா, 45. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இவர் கடந்த 6 ஆண்டுக்கு முன் கட்டட வேலைக்காக துபாய்க்கு சென்றார். கடந்த 4 மாதமாக வீட்டிற்கு பணம் அனுப்பாமல் இருந்துள்ளார். குமார் வேலை செய்ய கம்பெனியில் இருந்து, கடந்த 4 நாட்களுக்கு முன் குமார் இறந்து விட்டதாகவும், அவரது உடலை பெற்றுச்செல்லுமாறு லலிதாவிற்கு, கம்பெனி மனித வள மேலாளர் போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.

கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காமல், ஏமாற்றிய கம்பெனியிடமிருந்து இழப்பீடு பெற்றுத்தருவதோடு, இறந்த குமாரின் உடலை சிவகங்கைக்கு கொண்டு வர உதவவேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த மனுவை கலெக்டர் ஆஷா அஜித்திடம் வழங்கினர். ///





      Our Apps Available On




      Dinamalar

      Follow us