/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சாக்கோட்டையில் பால்குடத் திருவிழா பக்தர்கள் நேர்த்திக்கடன் சாக்கோட்டையில் பால்குடத் திருவிழா பக்தர்கள் நேர்த்திக்கடன்
சாக்கோட்டையில் பால்குடத் திருவிழா பக்தர்கள் நேர்த்திக்கடன்
சாக்கோட்டையில் பால்குடத் திருவிழா பக்தர்கள் நேர்த்திக்கடன்
சாக்கோட்டையில் பால்குடத் திருவிழா பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED : ஜூன் 14, 2024 05:02 AM

காரைக்குடி: சாக்கோட்டையில் உள்ள சாக்கை உய்யவந்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும் பால்குடம் எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.
சாக்கை உய்யவந்தம்மன் கோயில் திருவிழா கடந்த ஜூன் 6ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி, கரும்புத் தொட்டில் எடுத்தும், அலகு குத்தியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். காலை மற்றும் இரவு நேரங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சாக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று பால்குட திருவிழாவும், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மாலையும் நடைபெறுகிறது.