Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மானாமதுரை நம்பி நாகம்மாள் கோயிலில் முளைப்பாரி விழா

மானாமதுரை நம்பி நாகம்மாள் கோயிலில் முளைப்பாரி விழா

மானாமதுரை நம்பி நாகம்மாள் கோயிலில் முளைப்பாரி விழா

மானாமதுரை நம்பி நாகம்மாள் கோயிலில் முளைப்பாரி விழா

ADDED : ஆக 04, 2024 06:08 AM


Google News
மானாமதுரை : மானாமதுரை நம்பி நாகம்மாள் கோயிலில் ஆக.,7ம் தேதி முளைப்பாரி விழா நடைபெற உள்ளது.

மானாமதுரை - தாயமங்கலம் ரோட்டில் உள்ள நம்பி நாகம்மாள் கோயிலில் வருடம் தோறும் ஆடியில் முளைப்பாரி விழா நடைபெறுவது வழக்கம்.

இந்தாண்டிற்கான திருவிழா ஜூலை 30ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

இதனை தொடர்ந்து தினந்தோறும் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை, பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆக.,6ம் தேதி காலை 7:45 மணிக்கு வைகை ஆற்றிலிருந்து பக்தர்கள் சந்தனக்குடம், தீச்சட்டி, பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து 7ம் தேதி மதியம் 3:00 மணிக்கு முளைப்பாரி ஓடுகளை முக்கிய வீதிகளின் வழியே கொண்டு சென்று அலங்கார குளத்தில் கரைக்க உள்ளனர்.

8ம் தேதி நாக சதுர்த்தியை முன்னிட்டு 108 கலசாபிஷேகம், அபிஷேக, ஆராதனை நடைபெற உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us