ADDED : ஜூலை 18, 2024 07:20 AM
தேவகோட்டை: தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் தாலுகா செயலாளர் செல்வராஜ் தலைமையில் நடந்தது.
மாவட்டக் குழு உறுப்பினர் பொன்னுச்சாமி, நகர செயலாளர் அஜிஸ்கான், மாவட்ட செயலாளர் கருப்புச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நாகராஜன், முத்துராமலிங்க பூபதி தாலுகா உறுப்பினர்கள் கேசவன் உடையப்பன் ராமு சேவியர் உட்பட கட்சியினர் பங்கேற்றனர்.