ADDED : ஜூலை 27, 2024 06:21 AM
மானாமதுரை : மின்கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற வலியுறுத்தி மார்க்.
கம்யூ.,கட்சி சார்பில் மானாமதுரை நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ஆண்டி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி, மாவட்ட குழு உறுப்பினர் விஜயகுமார் கண்டன உரை ஆற்றினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் விநாயகமூர்த்தி,வீரைய்யா, முத்துராமலிங்கம் ,முனியராஜ்,பரமாத்மா, முருகானந்தம்,காசிராஜன்,தேவதாஸ், ராஜாராம், பாலசுந்தரி கலந்து கொண்டனர்.