ADDED : ஜூன் 16, 2024 04:57 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் கலியுக மெய் அய்யனார் கோயில் புரவியெடுப்பு விழாவை முன்னிட்டு பி.மதகுபட்டி கிராமத்தார்கள் இளைஞர்கள் சார்பில் மஞ்சுவிரட்டு நடந்தது. கோயில் முன்பாக உள்ள வயலில் நடந்த இம்மஞ்சுவிரட்டில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றன.
முதலில் கோயில் மாடுகளுக்கு மரியாதை செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது. அதை தொடர்ந்து அனைத்து மாடுகளும் கட்டுமாடுகளாக அவிழ்க்கப்பட்டன. மாடுகள் முட்டியதில் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.