ADDED : ஜூன் 16, 2024 04:58 AM

சிவகங்கை:பாகனேரி புல்வநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
இதில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டையை சேர்ந்த 44 ஜோடி மாடுகள் பங்கேற்றன. பெரிய மாட்டுபிரிவில் 19 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டு பிரிவில் 25 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.