Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கோயிலில் கும்பாபிஷேகம்

கோயிலில் கும்பாபிஷேகம்

கோயிலில் கும்பாபிஷேகம்

கோயிலில் கும்பாபிஷேகம்

ADDED : மார் 13, 2025 04:57 AM


Google News
Latest Tamil News
இளையான்குடி: இளையான்குடி அருகே சானாரேந்தல் மாதாபுரத்தில் மாணிக்கவள்ளி அம்மன் கோயில் சிதிலமடைந்திருந்தது. அப்பகுதியைச் சேர்ந்த மாணிக்கம், சுரேஷ், ஜெயராஜ் குடும்பத்தினர் உதவியுடன் கிராம மக்கள் சார்பில் திருப்பணிகள் நடந்தன.

நேற்று காலை சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

முன்னதாக கோயில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடந்தன. விழாவில் எம்.எல்.ஏ., தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன், நிர்வாகிகள் காளிமுத்து,கருணாகரன், கண்ணன் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை காரக்குளம்,சானாரேந்தல் மாதாபுரம் கிராம மக்கள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us