ADDED : ஜூன் 10, 2024 06:17 AM
மானாமதுரை : மானாமதுரை அருகே குவளைவேலியில் ஊர்காவல சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களின் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயிலில் வீற்றிருக்கும் கருப்பண சுவாமி சேமங்குதிரை, மகா கணபதி, பாலமுருகன் கோயில் கோபுர கட்டுமான பணிகள் முடிவுள்ள நிலையில், ஜூன் 5 ல் கணபதி ேஹாமத்துடன் கும்பாபிேஷக பணிகள் துவங்கின. இரண்டு மற்றும் 3 ம் கால யாகசாலை பூஜை நடந்தது.நேற்று காலை 4 ம் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிேஷகம் தொடங்கியது. கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தினர். கிராம கமிட்டியினர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.