/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி அவதார விழா கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி அவதார விழா
கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி அவதார விழா
கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி அவதார விழா
கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி அவதார விழா
ADDED : ஜூலை 21, 2024 04:56 AM

மானாமதுரை: கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி அவதரித்த தினத்தை முன்னிட்டு நேற்று காலை 7:15 மணி முதல் 10:00 மணிக்குள் அவதார இல்லம் பட்டமான் கருப்பனேந்தல் மடம் தவச்சாலையில் அமைந்துள்ள சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமி ஜீவ ஒடுக்கமான இடத்தில் பூஜைகள் நடத்தப்பட்டது.
முன்னதாக அதிகாலை சுவாமிக்கு 18 வகையானபொருட்களால் திருமஞ்சனம் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து அபிஷேக, ஆராதனைகளும், அன்னதானமும் நடைபெற்றது. இரவு 8:00 மணிக்கு பூப்பல்லக்கில்சுவாமி வீதி உலா சென்றார்.
ஏற்பாடுகளை கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் அவதார இல்ல பரம்பரை தர்மகர்த்தா பரமசிவம் மற்றும் நிர்வாகிகள் சேகர், தண்டாயுதபாணி மற்றும் கட்டிக்குளம் கிராம மக்கள் செய்திருந்தனர்.