ADDED : ஜூன் 13, 2024 06:08 AM
காரைக்குடி: அமராவதி புதுார் சாரதா நிகேதன் மகளிர் கல்லுாரியில் சுவாமி ஆத்மானந்த மகராஜ் 86வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
ஆஸ்ரம அம்பாக்கள், சாரதேஸ்வரி பிரியா அம்பா, ராம கிருஷ்ண பிரியா அம்பா சிறப்பு வழிபாடு நிகழ்த்தினர். கல்லுாரி நிறுவனர் ஆத்மானந்த மகராஜ் வாழ்வியல் நெறிமுறைகள் குறித்து கல்லுாரி முதல்வர் சிவசங்கரி ரம்யா, இயக்குனர் மீனலோச்சனி ,பேராசிரியர் நித்திலா, தலைமையாசிரியர் பிரேமலதா பேசினர். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் மகராஜ் படத்திற்கு மலர் துாவி வழிபாடு செய்தனர்.