ADDED : ஜூலை 15, 2024 04:11 AM
காரைக்குடி : பள்ளத்தூரில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.
பேரூராட்சி தலைவர் சாந்தி துவக்கி வைத்தார். ரோட்டரி முத்து சங்க தலைவர் முருகப்பன் வரவேற்றார். திட்ட இயக்குனர் எட்டுவர்ட் சின்னப்பன், கோவிலூர் கானல் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் சந்தீப் அகர்வால், ரோட்டரி துணை ஆளுநர் லியாகத் அலி பங்கேற்றனர். ரோட்டரி செயலாளர் பிரான்சிஸ் சேவியர் நன்றி கூறினார்.