ADDED : ஜூலை 07, 2024 02:08 AM
மானாமதுரை: இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட பெத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த நடராசன் மகன் சத்தியேந்திரன் 37, தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திரா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
மனைவி சந்திரா வீட்டிற்கு வந்த சத்தியேந்திரன் இளையான்குடி திரும்புவதற்காக மானாமதுரை புது பஸ் ஸ்டாண்டிற்கு சென்ற நிலையில் அருகிலுள்ள கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து பலியானார்.
மானாமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.