Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சேதமடைந்த குடியிருப்பு; போலீசார் அச்சம்

சேதமடைந்த குடியிருப்பு; போலீசார் அச்சம்

சேதமடைந்த குடியிருப்பு; போலீசார் அச்சம்

சேதமடைந்த குடியிருப்பு; போலீசார் அச்சம்

ADDED : ஜூலை 24, 2024 06:15 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை : சிவகங்கை காந்தி வீதியில் வாரச்சந்தை அருகே போலீசாருக்கு 8 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பிலும் 8 வீடுகள் உள்ளது. இதில் தற்போது 40 போலீசாரின் குடும்பங்கள் வசிக்கின்றனர்.

இந்த குடியிருப்பு கட்டி 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. இந்த கட்டடங்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் சில கட்டடத்தின் சிமென்ட் காரை பெயர்ந்து விழுகின்றன. சில கட்டடங்கள் முழுவதும் சேதம் அடைந்துள்ளது.

சேதமடைந்துள்ள கட்டடத்தில் குடியிருக்க போலீசார் குடும்பங்கள் அச்சப்படுகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us