ADDED : ஜூலை 25, 2024 04:31 AM
மானாமதுரை: மானாமதுரையில் ஊரக பகுதிகளான மாங்குளம், தெற்குச்சந்தனுார், தெ. புதுக்கோட்டை மேலநெட்டூர், மேலப்பிடாவூர், கீழப்பிடாவூர், மேலப்பசலை, கீழப்பசலை, எம்,கரிசல்குளம் சின்னகண்ணனுார், கீழமேல்குடி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த கிராம மக்களுக்கான மக்களிடம் முதல்வர் திட்ட முகாமை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித், எம். எல். ஏ., தமிழரசி துவக்கி வைத்து பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினர்.
தாசில்தார் கிருஷ்ணக்குமார், ஊராட்சி ஒன்றிய தலைவர் லதா அண்ணாத்துரை,பி.டி.ஓ.,க்கள் லுாயிஸ் ஜோசப் பிரகாஷ், மாலதி,மேலாளர் விஜயகுமார் மற்றும் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.