/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மானாமதுரை வாரச்சந்தையில் காலிபிளவர் ஒன்று ரூ.80 மானாமதுரை வாரச்சந்தையில் காலிபிளவர் ஒன்று ரூ.80
மானாமதுரை வாரச்சந்தையில் காலிபிளவர் ஒன்று ரூ.80
மானாமதுரை வாரச்சந்தையில் காலிபிளவர் ஒன்று ரூ.80
மானாமதுரை வாரச்சந்தையில் காலிபிளவர் ஒன்று ரூ.80
ADDED : ஜூன் 21, 2024 04:18 AM
மானாமதுரை: மானாமதுரை வாரச்சந்தையில் காலிப்ளவர் ஒன்று ரூ.80க்கும்,பல்லாரி வெங்காயம் ஒரு கிலோ ரூ.50க்கும், தக்காளி ரூ.80 என விற்கப்பட்டது.
மானாமதுரை வாரச்சந்தையில் மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, இளையான்குடி, சிவகங்கை, பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்இருந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பல்வேறு விதமான பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக விலை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி இந்த வாரம் ஒரு கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போன்று காலிபிளவர் பெரியது ரூ.80க்கும், சிறியது ரூபாய் 60க்கும் அவரைக்காய் கிலோ ரூ.180க்கும், பெரிய வெங்காயம் ரூ. 50க்கும் சின்ன வெங்காயம் ரூ. 75க்கும் சின்ன பாகற்காய் ஒரு கிலோ ரூ.280க்கும், கத்தரிக்காய் 60க்கும், பட்டர் பீன்ஸ்,சோயா பீன்ஸ் ஆகியவை ரூ.220க்கும் என விற்பனை செய்யப்பட்டது.
காய்கறி வியாபாரிகள் கூறியதாவது:
கடந்த வாரம் கோடை மழையினால் விலை உயர்ந்தது போல் இந்த வாரம் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் அனைத்து காய்கறிகளின் விலையும் கூடியுள்ளது.வரும் வாரங்களில் விலை குறைய வாய்ப்புள்ளது என்றனர்.