ADDED : ஜூன் 21, 2024 04:39 AM

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில் ரத்த தான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
முதல்வர் சத்தியபாமா தலைமை வகித்து துவக்கி வைத்தார். மருத்துவ கண்காணிப்பாளர் குமரவேல், நிலைய மருத்துவர் மகேந்திரன், துணை நிலைய மருத்துவர் முகமது ரபி, தென்றல் முன்னிலை வகித்தனர்.
மருத்துவ கல்லுாரி ரத்த வங்கி பொறுப்பாளர்கள் டாக்டர் விஜய லெட்சுமி, டாக்டர் சித்து ஹரி கலந்து கொண்டனர்.