ADDED : ஜூலை 05, 2024 04:43 AM
மானாமதுரை: சிவகங்கை மாவட்ட காவல்துறை மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் ஒன்றிணைவோம்,சமத்துவம் காண்போம் விழிப்புணர்வு விழா மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் கூடுதல் எஸ்.பி.,கலை கதிரவன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சுரேஷ் குமார், டி.எஸ்.பி.,க்கள் கண்ணன்,சண்முக சுந்தரம். தாசில்தார் ராஜா, இன்ஸ்பெக்டர் தேவி,தலைமை ஆசிரியர் பேப்லிட் பேசினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு புள்ளியியல் ஆய்வாளர் கண்ணதாசன் தொகுத்து வழங்கினார். எஸ்.ஐ., தமிழ்செல்வி நன்றி கூறினார்.