/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ இரட்டை கொலை வழக்கில் ஆயுதம் கொடுத்தவர் கைது இரட்டை கொலை வழக்கில் ஆயுதம் கொடுத்தவர் கைது
இரட்டை கொலை வழக்கில் ஆயுதம் கொடுத்தவர் கைது
இரட்டை கொலை வழக்கில் ஆயுதம் கொடுத்தவர் கைது
இரட்டை கொலை வழக்கில் ஆயுதம் கொடுத்தவர் கைது
ADDED : ஜூலை 11, 2024 05:06 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே கொல்லங்குடியில் நடந்த இரட்டை கொலையில் 4 பேர் சிவகங்கை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். கொலைக்கு ஆயுதம் கொடுத்து உதவியவரை சிவகங்கை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா நாச்சிகுளம் சரவணா நகர் ஆண்டிச்சாமி மகன்கள் ஜெயசூர்யா 24, சுபாஷ் 23. இருவர் மீதும் வழக்கு உள்ளது. இருவரும் கடந்த சில மாதங்களாக சிவகங்கையில் ஓட்டலில் பணிபுரிந்த போது, நண்பர்களான அரண்மனை சிறுவயல் ராஜேஷ் 19, சாத்தரசன் பட்டி நவீன் 19, கிளுவச்சி அஜய் 20 ஆகியோருடன் சேர்ந்து கொல்லங்குடி அருகே கல்லணையில் தங்கி மஞ்சுவிரட்டு காளைகளை வளர்த்தனர். பனங்குடியில் நடந்த மஞ்சுவிரட்டில் இந்த மாட்டை அவிழ்த்தனர்.
மாட்டை பிடிப்பதில் புதுப்பட்டி சக்தி மகன் மதன் 20 மற்றும் அவரது நண்பர்களுடன் பிரச்னை ஏற்பட்டது. இரண்டு தரப்பினரும் தாக்கி கொண்டனர். ஜூன் 30 இரவு 10:30 மணிக்கு மதன் மற்றும் அவரது நண்பர்கள் கொல்லங்குடி அருகே கல்லணை பகுதியில் ஜெயசூர்யா, சுபாஷ் இருப்பதை அறிந்து அங்கு சென்று அவர்களை தாக்கி கொலை செய்தனர். இதில் தப்பிய ஜெயசூர்யா நண்பர்களான ராஜேஷ் மற்றும் நவீன் காளையார்கோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
காளையார்கோவில் போலீசார் சிவகங்கை மதுமதி 26, திவாகர் 23, சுந்தரநடப்பு சந்தோஷ் 23, நகரம்பட்டி ராம்ஜி 21, யுவராஜ் 22, ஒக்கூர் அபினேஷ் 22, மதகுபட்டி அருண்குமார் 30 ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் விசாரித்ததில் இந்த கொலையில் தேடப்பட்ட மதன், மற்றும் முத்துபாண்டி ,மதுமதியின் அலைபேசி மூலமாக இன்ஸ்டாகிராமில் மற்ற நண்பர்களுடன் கொலைக்கான சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது.
புதுப்பட்டி சக்தி மகன் மதன் 21, சவரிநாதன் மகன் முத்துபாண்டி 21, சிவகங்கை முத்துக்கருப்பன் மகன் செல்வகுமார் 28, கார்த்திகேயராஜா மகன் மணிகண்டபிரபு 22 ஆகியோர் ஜூலை 4 அன்று சிவகங்கை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய தர்ஷன், சஞ்சய், சக்திவேல் உள்ளிட்ட மூன்று பேரை காளையார்கோவில் போலீசார் தேடிவந்த நிலையில். புதுப்பட்டி முத்துக்குமார் மகன் சக்திவேலை 25 போலீசார் கைது செய்தனர். சக்திவேல் தான் இந்த கொலைக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.