Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில்உறுப்பினர்கள் விண்ணப்பம்

நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில்உறுப்பினர்கள் விண்ணப்பம்

நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில்உறுப்பினர்கள் விண்ணப்பம்

நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில்உறுப்பினர்கள் விண்ணப்பம்

ADDED : மார் 13, 2025 04:52 AM


Google News
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 2 உறுப்பினர்கள் பணியிடத்திற்கு பணி நியமனம் செய்ய பொதுமக்கள் தொடர்புடைய துறைகளான போக்குவரத்துத்துறை, தபால் தந்தி தொலை தொடர்புத்துறை, மின்சாரத்துறை, மருத்துவத்துறை, இன்சூரன்ஸ் காப்பீடு நிறுவனம், கல்வி நிறுவனம், வீட்டு வசதி மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற அரசுத்துறைகள், அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு இதழில் பதிவுபெற்ற அலுவலர் 62 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் பெயர், பாலினம், முகவரி, கல்வித்தகுதி, பணியின் விபரம், பணியில் சேர்ந்த நாள், பணி ஓய்வு பெற்ற நாள், பணியாற்றிய காலம் போன்ற விபரங்களுடன் விண்ணப்பிக்கவும். விண்ணப்பத்தை மார்ச் 20 மாலை 5:45 மணிக்குள் 'மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சிவகங்கை' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us