Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஆந்திர நாவல் பழம் ரூ.200க்கு விற்பனை

ஆந்திர நாவல் பழம் ரூ.200க்கு விற்பனை

ஆந்திர நாவல் பழம் ரூ.200க்கு விற்பனை

ஆந்திர நாவல் பழம் ரூ.200க்கு விற்பனை

ADDED : ஜூலை 12, 2024 04:28 AM


Google News
Latest Tamil News
மானாமதுரை: மானாமதுரை வாரச்சந்தைக்கு மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, இளையான்குடி, சிவகங்கை, பரமக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வந்து காய்கறி உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்கின்றனர்.

நேற்று நடைபெற்ற சந்தையில் பச்சை பட்டாணி, சின்ன பாகற்காய், பட்டர் பீன்ஸ், சோயா பீன்ஸ் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று உருளைக்கிழங்கு ரூ.80, காலிப்ளவர் பெரியது ஒன்று ரூ. 80க்கும், சிறியது ரூ.50க்கும் முட்டைக்கோஸ் பெரியது ரூ.60க்கும், சிறியது ரூ.40க்கும் விற்கப்பட்டது.

பல்லாரி வெங்காயம், சின்ன வெங்காயம் ரூ. 50க்கும், தக்காளி ரூ. 50க்கும், பச்சை மிளகாய் ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆந்திர நாவல் பழங்கள் ஒரு கிலோ ரூ.200க்கும் விற்பனை செய்யப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us