/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வீர அழகர் கோயிலில் ஆடி பிரமோற்ஸவ விழா தீர்த்தவாரி வீர அழகர் கோயிலில் ஆடி பிரமோற்ஸவ விழா தீர்த்தவாரி
வீர அழகர் கோயிலில் ஆடி பிரமோற்ஸவ விழா தீர்த்தவாரி
வீர அழகர் கோயிலில் ஆடி பிரமோற்ஸவ விழா தீர்த்தவாரி
வீர அழகர் கோயிலில் ஆடி பிரமோற்ஸவ விழா தீர்த்தவாரி
ADDED : ஜூலை 23, 2024 05:23 AM

மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் நேற்று பட்டத்தரசி கிராம மண்டகப்படியில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட மானாமதுரை வீர அழகர் கோயிலில் வருடம் தோறும் ஆடி பிரம்மோற்ஸவ விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்த நாட்களின் போது சுவாமி பரங்கி நாற்காலி, பல்லக்கு, குதிரை, சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் மண்டகப் படிகளுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.
இந்தாண்டு விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களின் போது சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. திருக்கல்யாணம் கடந்த 18ம் தேதியும், 21ல் தேரோட்டமும் நடந்தது. விழாவின் நிறைவாக நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. கோயிலில் இருந்து வீர அழகர் வெள்ளை குதிரையில் பட்டத்தரசி கிராம மண்டகப்படிக்கு சென்றார்.
மாலை சக்கரத்தாழ்வாருக்கு மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள அலங்கார குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. வீர அழகர் அண்ணாமலை நகர், அன்பு நகர், சிவகங்கை ரோடு பகுதிகளில் உலா வந்தார். விழா ஏற்பாட்டை கோயில் கண்காணிப்பாளர் சீனிவாசன், அர்ச்சகர் கோபி மாதவன்(எ) முத்துச்சாமி செய்திருந்தனர்.