ADDED : ஜூலை 20, 2024 12:05 AM
காரைக்குடி : காரைக்குடியில் 86 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காரைக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த மினி வேனை போலீசார் சோதனை செய்தனர்.
சோதனையில் 7 மூடையில் 86 கிலோ புகையிலைப் பொருட்கள் இருந்துள்ளது. விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்த சண்முகம் மகன் குமாரவடிவேல் 32, மற்றும் காரைக்குடி எம்.எம்., தெருவை சேர்ந்த அன்னராம் மகன் திலோகரம் 36 என்பது தெரிய வந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார், சட்ட விரோதமாக வைத்திருந்த 86 கிலோ புகையிலை மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.