ADDED : ஜூலை 03, 2024 11:12 AM
ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா பண்ணப்பட்டியை சேர்ந்தவர் சுந்தரம், 55. சேலம் ரயில்வே கூட்ஸ்ஷெட்டில் சுமை துாக்கும் தொழிலாளியாக பணிபுரிந்தார். நேற்று பணி முடிந்து, மாலை, 6:10 மணிக்கு, 'சைன்' பைக்கில், சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஹெல்மெட் அணியாமல் சென்று கொண்டிருந்தார்.
ஓமலுாரில் அண்ணமார் ஓட்டல் அருகே சென்றபோது, எதிரே வந்த கன்டெய்னர் லாரி மோதியதில், சுந்தரம் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். லாரியை விட்டு தப்பி ஓடிய டிரைவரை, ஓமலுார் போலீசார் தேடுகின்றனர்.