Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பறந்து வந்த மயில் மோதி பைக்கில் சென்ற பெண் பலி

பறந்து வந்த மயில் மோதி பைக்கில் சென்ற பெண் பலி

பறந்து வந்த மயில் மோதி பைக்கில் சென்ற பெண் பலி

பறந்து வந்த மயில் மோதி பைக்கில் சென்ற பெண் பலி

ADDED : டிச 01, 2025 03:27 AM


Google News
சேலம்:சேலம் மாவட்டம் பெரிய சீரகாபாடி, நாவப்பாளையத்தை சேர்ந்தவர் பிரபுதேவா. பொக்லைன் வாகன டிரைவர். இவரது மனைவி கோகிலா, 21. இவர்களது மகன் ருத்ரன், 2. மேலும் வீட்டில் பவர்லுாம் தறியை, தம்பதியர் கவனித்து வந்தனர். அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் இன்று நடக்கிறது. இதனால் நேற்று தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.

அதில் பங்கேற்க, மாலை வாங்க, தம்பதியர், 'பல்சர்' பைக்கில் இளம்பிள்ளை சென்றனர். காலை, 9:00 மணிக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். புதுப்பாளையத்தில் வந்தபோது, சாலையோர வேலியில் இருந்த மயில் பறந்து வந்து, பிரபுதேவா கன்னத்தில் மோதியது. இதில் நிலைதடுமாறி தம்பதியர் விழுந்தனர். கோகிலாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மக்கள் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற

போது இறந்தது தெரியவந்தது. ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us