Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'சரணம் ஐயப்பா' கோஷம்

'சரணம் ஐயப்பா' கோஷம்

'சரணம் ஐயப்பா' கோஷம்

'சரணம் ஐயப்பா' கோஷம்

ADDED : டிச 01, 2025 03:28 AM


Google News
ஆட்டையாம்பட்டி ஓம்சக்தி விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள, சுவாமி ஐயப்பன் கும்பாபிேஷக விழா, நேற்று முன்தினம் மாலை கணபதி யாகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை, மகா கணபதி, லட்சுமி, சுதர்சன யாகங்கள் நடத்தப்பட்டன. நேற்று காலை 8:00 மணிக்கு இரண்டு கால யாகசாலை பூஜைகள், மகா பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்து, அதில் வைக்கப்பட்டிருந்த புனிதநீர் கலசங்களை, சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு, கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து, 9:00 மணிக்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்களின், 'சுவாமியே சரணம் ஐயப்பா' கோஷம் முழங்க, சுவாமி ஐயப்பன் சன்னதி கோபுர கலசங்கள் மீது ஊற்றி கும்பாபி ேஷகத்தை நடத்தி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வெங்கட்ரமணர் கோவில்

காடையாம்பட்டி, காருவள்ளி சின்னதிருப்பதியில் உள்ள வெங்கட்ரமணர் சுவாமி கோவில் கும்பாபிேஷக விழாவில், நேற்று மாலை மூலவர் பத்மாவதி தாயாருக்கு, 81 கலச திருமஞ்சனம் நடந்தது. இன்று காலை, 9:30 மணிக்கு, மூலவர், ராஜகோபுரத்துக்கு மகா கும்பாபி ேஷகம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம், திருக்கல்யாணம், பெருமாள் உபய நாச்சியாருடன் பல்லக்கில் திருவீதி உலா நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us