Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குழாய் பதித்து ஓடையில் விடப்படும் கழிவுநீர் கடைக்காரர்களுக்கு கடிவாளம் போடப்படுமா...

குழாய் பதித்து ஓடையில் விடப்படும் கழிவுநீர் கடைக்காரர்களுக்கு கடிவாளம் போடப்படுமா...

குழாய் பதித்து ஓடையில் விடப்படும் கழிவுநீர் கடைக்காரர்களுக்கு கடிவாளம் போடப்படுமா...

குழாய் பதித்து ஓடையில் விடப்படும் கழிவுநீர் கடைக்காரர்களுக்கு கடிவாளம் போடப்படுமா...

ADDED : ஜூன் 14, 2025 06:38 AM


Google News
வாழப்பாடி: வாழப்பாடி, எம்.பெருமாபாளையம் ஊராட்சி வெள்ளாள-குண்டம் பிரிவு சாலை எதிரே, விஜயமஹால் கார்டனில், திரு-மண மண்டபம், பேக்கரி, இனிப்பு உற்பத்தி நிறுவனம் உள்பட பல்வேறு கடைகள் உள்ளன.

அவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர், காட்டுவேப்பிலைப்-பட்டி ஊராட்சியில் உள்ள செட்டி ஏரிக்கு செல்லும் ஓடையில், குழாய் பதித்து விடப்படுகிறது.

இதனால் ஓடையே, கழிவுநீர் குளமாக மாறியுள்ளது. அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது.

இதுகுறித்து மாசு கட்டுப்பாடு வாரியம், ஒன்றிய அலுவலகம், சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மேலும் ஓடையையும் பாழ்ப-டுத்துவதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us