/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் 4 பேர் விபரீத முயற்சி கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் 4 பேர் விபரீத முயற்சி
கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் 4 பேர் விபரீத முயற்சி
கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் 4 பேர் விபரீத முயற்சி
கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் 4 பேர் விபரீத முயற்சி
ADDED : ஜூன் 14, 2025 06:38 AM
இடைப்பாடி: இடைப்பாடி, கவுண்டம்பட்டி சக்தி நகரை சேர்ந்தவர் பாலாஜி, 32. ஓட்டலில் பணிபுரிகிறார். இவரது மனைவி புனிதா, 26. இவர்களுக்கு, 7 மற்றும் 3 வயதுகளில், இரு பெண் குழந்தைகள் உள்ளனர். பாலாஜிக்கு, 3 லட்சம் ரூபாய் கடன் இருந்ததால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
நேற்று முன்தினம் இரவு பாலாஜி, புனிதா, 2 குழந்தைகள் ஆகியோர், பூச்சிக்கொல்லி மருந்தை தோசையில் ஊற்றி சாப்-பிட்டு துாங்கியுள்ளனர். நேற்று காலை, அருகே உள்ள குடும்பத்-தினர் வந்து பார்த்தபோது, 4 பேரும் மயங்கி கிடந்தனர்.
உடனே, 4 பேரையும் மீட்டு, அருகே உள்ள அரசு மருத்துவம-னையில் சேர்த்தனர். இடைப்பாடி போலீசார் விசாரித்ததில், கடன் கேட்டு யாரும் தொந்தரவு செய்யாததும், 4 பேரும் நல-முடன் இருப்பதும் தெரிந்தது.