ADDED : ஜூலை 10, 2024 07:26 AM
சேலம்: வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது.இதுகுறித்து சேலம் மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர் சந்தீப் சிங் நேகி அறிக்கை: ஜூலை, 10ல்(இன்று), சேலம், தளவாய்பட்டியில் உள்ள மண்டல பி.எப்., அலுவலகத்தில், பி.எப்., குறைதீர் கூட்டம் நடக்கிறது.
அதேபோல் கிருஷ்ணகிரி கூட்டுறவு காலனியில் உள்ள மாவட்ட பி.எப்., அலுவலகம்; ஈரோடு, கருங்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட பி.எப்., அலுவலகம் ஆகிய இடங்களிலும் நடக்கிறது. இதில் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், முதலாளிகள், ஓய்வூதியம் பெறுவோர், காலை, 10:30 முதல் மதியம், 1:00 மணி வரை, அந்தந்த அலுவலகங்களுக்கு சென்று குறைகளை தீர்த்துக்கொள்ளலாம்.