/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை சிறப்பு குறைதீர் முகாம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை சிறப்பு குறைதீர் முகாம்
குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை சிறப்பு குறைதீர் முகாம்
குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை சிறப்பு குறைதீர் முகாம்
குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை சிறப்பு குறைதீர் முகாம்
ADDED : ஜூன் 13, 2025 01:49 AM
நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில், குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு குறைதீர் முகாம், நாளை (14ம் தேதி) நடக்கிறது. நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவிக்க சிறப்பு முகாம் நடக்கவுள்ளது. இந்த முகாம் நாளை காலை, 10:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை நடக்கும்.
நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலுார் மற்றும் குமாரபாளையம் தாசில்தார் அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடக்கிறது. எனவே, பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு தங்கள் குறைகளுக்கு தீர்வு காணலாம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.