/உள்ளூர் செய்திகள்/சேலம்/அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல் போராட்டம்அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல் போராட்டம்
அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல் போராட்டம்
அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல் போராட்டம்
அடிப்படை வசதிகள் கேட்டு சாலை மறியல் போராட்டம்
ADDED : ஜூலை 16, 2024 02:04 AM
கெங்கவல்லி: தம்மம்பட்டியில், அடிப்படை வசதிகள் கேட்டு தி.மு.க., கவுன்-சிலர் மகன் உள்ளிட்டோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்-டனர்.கெங்கவல்லி அருகே, தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்து, 8வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சமினாபேகம்.
இவரது மகன் அசேன்-பாஷா தலைமையில் அப்பகுதி மக்கள், சாக்கடை வசதி, சீரான குடிநீர் கேட்டு நேற்று, தம்மம்பட்டி - கெங்கவல்லி சாலையில் கற்களை போட்டு, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தம்மம்பட்டி போலீசார், அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அடிப்படை வசதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்றனர். இதையடுத்து மறியலில் ஈடு-பட்டவர்கள் கலைந்து சென்றனர்.