தந்தையை தாக்கிய மகனுக்கு 'காப்பு'
தந்தையை தாக்கிய மகனுக்கு 'காப்பு'
தந்தையை தாக்கிய மகனுக்கு 'காப்பு'
ADDED : ஜூன் 26, 2025 02:18 AM
சேலம், சேலம், கிச்சிப்பாளையம், கஸ்துாரிபாய் தெருவை சேர்ந்தவர் பீமன், 50. இவரது மகன் சுரேஷ்குமார், 30. இவர், மது அருந்தும் பழக்கம் உடையவர். கடந்த, 23ல், மது அருந்த, தந்தையிடம், சுரேஷ்குமார் பணம் கேட்டார். அவர் தர மறுத்ததால் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார், கட்டையால் தாக்கியுள்ளார். பல் உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில், உறவினர்கள் பீமனை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார், சுரேஷ்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.