Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கால்வாய்க்கு இடம் பெயர்ந்த மீன்கள் மூட்டை கட்டி துாக்கிச்சென்ற மக்கள்

கால்வாய்க்கு இடம் பெயர்ந்த மீன்கள் மூட்டை கட்டி துாக்கிச்சென்ற மக்கள்

கால்வாய்க்கு இடம் பெயர்ந்த மீன்கள் மூட்டை கட்டி துாக்கிச்சென்ற மக்கள்

கால்வாய்க்கு இடம் பெயர்ந்த மீன்கள் மூட்டை கட்டி துாக்கிச்சென்ற மக்கள்

ADDED : மே 26, 2025 05:22 AM


Google News
மேட்டூர்:மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நேற்று நீர்-மட்டம், 111.60 அடியாக இருந்தது. அருகே உள்ள பாலம-லையில் சில நாட்களாக கனமழையால், கால்வாயில் பெருக்கெ-டுத்து சென்ற நீர், அணையில் கலந்தது.

பின் மழை குறைந்ததால் கால்வாயில் செல்லும் தண்ணீர் குறைந்த நிலையில், அங்குள்ள குட்டைகளில் ஏராளமான மீன்கள் காணப்பட்டன.

இதை பார்த்த சாம்பள்ளி ஊராட்சி, மாசிலாபாளையம், கோவில்பாளையம், அச்சங்காடு, மூலக்காடு கிராம மக்கள் ஏராள-மானோர் நேற்று, கால்வாயில் இறங்கி மீன்களை வலைவீசியும், கைகளாலும் பிடித்து சாக்கு மூட்டைகளில் கட்டியும், பலர் பாத்தி-ரங்களிலும் அள்ளியும் சென்றனர்.

இதில், அரை கிலோ முதல், 3 கிலோ வரை திலேப்பியா உள்ளிட்ட மீன்கள் அதிகமாக சிக்கின. காலை முதல் மதியம் வரை, 2 டன்னுக்கு மேல், மக்கள் மீன்களை பிடித்து சென்றனர். இதனால் விடுமுறை நாளான நேற்று பெரும்பாலான வீடுக-ளிலும், மீன் குழம்பு, 'கமகம'த்தது.

மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கால்வாயில் நீர்வ-ரத்து அதிகரிக்கும்போது மழைநீர் சுத்தமாக இருக்கும் என்பதால், அணையில் வசிக்கும் மீன்கள், கால்வாய் நீருக்கு படையெ-டுக்கும். பின் கால்வாயில் நீர்வரத்து குறையும்போது, மீன்களால் மீண்டும் அணைக்கு செல்ல முடியாது. அந்த மீன்கள், கால்வாய் குட்டைகளில் தேங்கி விடும். அந்த மீன்களையே மக்கள் பிடித்-துள்ளனர்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us