Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சிறுத்தையை பிடிக்க மக்கள் வலியுறுத்தல்

சிறுத்தையை பிடிக்க மக்கள் வலியுறுத்தல்

சிறுத்தையை பிடிக்க மக்கள் வலியுறுத்தல்

சிறுத்தையை பிடிக்க மக்கள் வலியுறுத்தல்

ADDED : ஜூன் 16, 2025 06:57 AM


Google News
மேட்டூர்: மேச்சேரி, புதுகாளிகவுண்டனுாரை சேர்ந்த விவசாயி வெங்கடா-சலம் வளர்த்து வந்த இரு செம்மறி ஆடுகளை கடந்த, 10ல் சிறுத்தை கடித்து கொன்றது.

இதனால் சிறுத்தையை பிடிக்க, டேனிஷ்பேட்டை வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, கூண்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கூண்டில், நாய், ஆடு என இரை வைக்காததால், சிறுத்தை சிக்கவில்லை. இந்நிலையில் மலை அடிவார கிராமங்களில் புகும் சிறுத்தையை, வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என கூறி, நேற்று புதுகாளிக-வுண்டனுார், அரசமரத்துார், வெற்றிலை மலை பகுதி மக்கள், 20 பேர், மேச்சேரி போலீஸ் ஸ்டேஷன் சென்று, போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர்.இதுகுறித்து டேனிஷ்பேட்டை வனச்சரகர் விமல்குமார் கூறு-கையில், ''கூண்டுகளில் இரை வைக்க, மேலதிகாரிகளிடம் அனு-மதி கோரப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us